படித்த திருமணமாகாத பெண்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச தையல் பயிற்சி 2020
தகுதியானவர்கள்;-
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் திருமணமாகாத சகோதரிகள் மற்றும் மனைவிகளுக்கு, நெல்லை தொழிலாளர் நல மையம் சார்பில் இலவச தையல் பயிற்சியும், உதவி தொகையும் வழங்கப்பட உள்ளது. 5-ம் வகுப்பும், அதற்கு மேலும் படித்தவர்கள், 16 வயது பூர்த்தியானவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.
உதவித்தொகையுடன் பயிற்சி;-
வருகிற ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு வருட காலத்துக்கு பயிற்சி நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மதியம் ஒரு மணி முதல் மாலை 4 மணி வரை ஆகிய நேரங்களில் பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சி காலத்தின் போது பயிற்சிபெறும் பெண்களுக்கு மாதத்துக்கு 150 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பயிற்சிகள்
தையல் பயிற்சி, துணி வெட்டும் பயிற்சி, பூத்தையல் போன்ற பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது. பயிற்சியின் முடிவில், தகுதியுள்ள மாணவிகள் அரசு தேர்வுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தேர்வு கட்டணம் வாரியத்தால் செலுத்தப்படும்.
தையல் எந்திரம் பரிசு
தேர்வில் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக தையல் எந்திரம் பரிசாக வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
சூ.தமிழ்செல்வி (அமைப்பாளர்), தொழிலாளர் நல மையம், 50/28 நியூ காலனி, பேராட்சியம்மன் கோவில் தெரு, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி- 627003 என்ற முகவரியில் நேரடியாக வந்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். குறைவான இடங்களே இருப்பதால் விண்ணப்பங்களை உடனடியாக பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் தொடர்புக்கு
இதுதொடர்பான அனைத்து விவரங்களுக்கு 99941 72668 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments